170 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மூடப்பட்ட East India Company
ஆங்கிலேய ஆட்சியின் அடையாளமாக இருந்த கிழக்கிந்திய கம்பெனி (East India Company), 170 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திவாலாகி மூடப்பட்டுள்ளது.
1600-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்தது.
1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பிறகு, 1858-இல் ஆங்கிலேய அரசு நேரடியாக இந்தியாவை ஆட்சி செய்தது.
1874-இல் கம்பெனி முற்றிலும் கலைக்கப்பட்டது.

அதன் பிறகு 2010-இல், இந்திய வணிகர் சஞ்சீவ் மேத்தா அந்த பெயரை வாங்கி, லண்டனில் Luxury Retail கடை தொடங்கினார்.
தேநீர், சொக்லேட், மசாலா போன்ற உயர்தர பொருட்களை விற்பனை செய்த இந்த நிறுவனம், 2025 அக்டோபரில் திவாலாகி, 600,000 பவுண்டு கடன் காரணமாக மூடப்பட்டது.
லண்டன் Mayfair பகுதியில் இருந்த கடை தற்போது காலியாக உள்ளது.
East India Company, இந்தியாவில் பெரும் சுரண்டல், வன்முறை, பஞ்சம் ஆகியவற்றை ஏற்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக வங்காள பஞ்சம் (Great Bengal Famine) சுமார் 30 மில்லியன் உயிரிழப்புக்கு காரணமானது.
சஞ்சீவ் மேத்தா, “ஒரு காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த கம்பெனி, இப்போது இந்தியரால் நடத்தப்படுகிறது” என்று பெருமையாக கூறியிருந்தார். ஆனால், நவீன வடிவில் தொடங்கிய இந்த முயற்சி, நிதி சிக்கல்களால் தோல்வியடைந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |