அமெரிக்க போர் கப்பலில் கழிப்பறை பிரச்சினை- ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்கல்
அமெரிக்காவின் மிகப்பெரிய விமான போர் கப்பலான USS Gerald R. Ford, தற்போது தொழில்நுட்ப சிக்கலால் கவனத்தை ஈர்த்துள்ளது.
கப்பலில் உள்ள கழிப்பறை மற்றும் கழிவுநீர் அமைப்பு அடைப்பு ஏற்பட்டதால், 4,500-க்கும் மேற்பட்ட கடற்படையினர் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நேரத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஈரான், அமெரிக்கா மீது போர் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், Gerald Ford கப்பல் மத்திய கிழக்கு கடலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அமெரிக்க கடற்படை அதிகாரிகள், “கப்பலின் கழிவுநீர் அமைப்பில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
Gerald Ford, 2023-இல் சேவையில் இணைக்கப்பட்ட, உலகின் மிக நவீன விமானக் கப்பலாகும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த சிக்கல், அமெரிக்க கடற்படையின் செயல்திறனை குறைக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், ஈரான் தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
Gerald Ford-ல் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை, அமெரிக்காவின் ராணுவ வலிமை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |