உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய அண்டை நாடு
எண்ணெய் விவகாரம் காரணமாக அண்டை நாடான ஸ்லோவாக்கியா உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தியது.
ஸ்லோவாக்கியா அரசு, உக்ரைனுக்கு வழங்கி வந்த அவசர மின்சார உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யா தொடர்ந்து உக்ரைனின் எரிசக்தி அமைப்புகளை தாக்கி, அங்கு அடிக்கடி மின்சார தடை ஏற்படுகிறது.
இந்த நிலையில், எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஸ்லோவாக்கியா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜனவரி மாதம் முதல், ரஷ்யா ட்ரோன் தாக்குதலால் ட்ருஸ்பா எண்ணெய் குழாய் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் மத்திய ஐரோப்பாவுக்கு செல்லும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.
ஆனால் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ, குழாய் இயங்குகிறது என்றும், உக்ரைன் அரசாங்கம் எண்ணெய் விநியோகத்தை அரசியல் காரணங்களுக்காக நிறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
“எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்கும் வரை உக்ரைனின் மின்சார வலையமைப்பை நிலைப்படுத்த உதவ முடியாது” என்று ஃபிகோ தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் தனது எண்ணெய் விநியோகத்தை மீண்டும் தொடங்காவிட்டால், ஸ்லோவாக்கியா உக்ரைனின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் முயற்சிக்கு ஆதரவை வாபஸ் பெறும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த உக்ரைன் வெளிவிவகார அமைச்சர், இரு நாடுகளும் பொறுப்புடன் நடந்து, ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஸ்லோவாக்கியாவில் எதிர்க்கட்சிகள், அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்த நடவடிக்கை, ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் எரிசக்தி துறையில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |