பிரித்தானியாவில் ஈஸ்டர் மிகக் கடுமையாக இருக்கும்: NHS தலைவர்கள் விடுத்த எச்சரிக்கை

covid19 easter NHS coronavirus Covidrules
By Arbin Apr 11, 2022 04:29 PM GMT
Report

பிரித்தானிய நிர்வாகம் மீண்டும் கொரோனா விதிகளை அமுலுக்கு கொண்டுவராவிட்டால் இந்த முறை ஈஸ்டர் மிகக் கடுமையாக இருக்கும் என NHS தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கூட்டம் மிகுந்த பகுதிகளில் மாஸ்க் கட்டாயமாக்குவது, பல பேர் ஒன்றாக கூடும் தனிப்பட்ட விருந்து கூடுகைகளை மட்டுப்படுத்துவது உள்ளிட்ட விதிகளை பிரித்தானியா மீண்டும் அமுலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், அவ்வாறான முடிவை விரைந்து மேற்கொண்டால், ஈஸ்டர் வாரத்தின் நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என NHS தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம் பதிவான 20,331 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது பிப்ரவரி 2021 க்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஈஸ்டர் மிகக் கடுமையாக  இருக்கும்: NHS தலைவர்கள் விடுத்த எச்சரிக்கை | Easter Brutal Two Covid Rules

மட்டுமின்றி, பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஸ்வாப் சோதனையை ரத்து செய்வதாக போரிஸ் நிர்வாகம் மேற்கொண்ட முடிவு காரணமாகவே கடந்த வாரம் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் கண்டது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே NHS தலைவர்கள் உடனடி நடவடிக்கை தேவை என கருத்து தெரிவித்துள்ளனர். துரித நடவடிக்கைகள் முன்னெடுப்பதால் மட்டுமே கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரிப்பதை தடுக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, அரசாங்கம் மீண்டும் பொது தகவல் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும், இதனால் தேவையின்றி மக்கள் மருத்துவமனையை நாடுவதை கட்டுப்படுத்தலாம் எனவும் NHS தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானியாவில் ஈஸ்டர் மிகக் கடுமையாக  இருக்கும்: NHS தலைவர்கள் விடுத்த எச்சரிக்கை | Easter Brutal Two Covid Rules

இங்கிலாந்தில் தற்போது 13 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்பில் அரசாங்கம் கவலை கொள்வதாக தெரியவில்லை எனவும், கொரோனா பாதிப்புடன் வாழ பழகுங்கள் என பிரித்தானிய மக்களை போரிஸ் அரசாங்கம் கைவிட்டதாகவே தெரிகிறது எனவும் நிர்வாகி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டுமின்றி, இங்கிலாந்தில் பெரும்பாலான மக்களுக்கு இலவச கொரோனா சோதனைகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

நோய் தொற்றும் ஆபத்து நிலையில் இருப்பவர்கள், உடல் நிலை பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ளிட்ட சில பேர்களுக்கு மட்டும் இலவசமாக ஸ்வாப் சோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US