திடீரென வெடித்து சிதறிய மர்ம பொருள்: காங்கோவில் சிறுவர்கள் உள்பட 15 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மர்ம பொருள் வெடித்ததில் சிறுவர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மர்ம பொருள் வெடித்து 15 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிவு மாகாணத்தில் கியாங்கிட்சி-யில் சிறுவர்கள் சிலர் விளையாடி கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அங்கு கிடந்த மர்ம பொருள் ஒன்றை எடுத்து கொண்டு சிறுவர்கள் தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதையடுத்து அந்த மர்ம பொருளை என்னவென்று பார்ப்பதற்காக வீட்டில் உள்ள பெரியவர்கள் முயற்சி செய்த போது அந்த மர்ம பொருள் வெடித்து சிதறியுள்ளது.
இதில் சிறுவர்கள் உட்பட மொத்தம் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் ஆயுத குழு மோதல்
கியாங்கிட்சியில் கடந்த சில வாரங்களாக உள்ளூர் ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த மோதலின் போது ஆயுத குழுக்களால் ஏராளமான வெடி குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
அவற்றை சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று விளையாடிய போது தான் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டு இருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |