நண்பர்கள் கண் முன்னே சுற்றுலாப்பயணியை கொன்று தின்ன கரடி: ஒரு அதிர்ச்சி சம்பவம்
ரஷ்யாவில் மலையேற்றத்துக்கு சென்ற நண்பர்கள் நால்வர் சைபீரியாவிலுள்ள ஓரிடத்தில் முகாமிட்டுத் தங்கியிருக்கிறார்கள். Yergaki Nature Park என்ற அந்த இடத்திலிருந்து அவர்கள் புறப்படும் நேரத்தில் திடீரென கரடி ஒன்று அங்கு வந்திருக்கிறது.
ஆளுக்கொருபக்கம் தப்பியோட முயன்ற நண்பர்களில் Yevgeny Starkov (42) என்பவர் கரடியிடம் சிக்க, மற்றவர்கள் உயரமான மலைப்பகுதியில் ஏறியிருக்கிறார்கள்.
மேலேயிருந்து அவர்கள் தாங்கள் முகாமிட்டிருந்த இடத்தைப் பார்க்கும்போது, அந்த கரடி அவர்கள் கண் முன்னாலேயே Starkovவைக் கடித்துக் குதறியிருக்கிறது.
தங்கள் கண் முன்னால் நண்பனை கரடி சாப்பிடுவதைக் கண்டு நடுங்கிப்போன மூவரும் சுமார் ஏழு மணி நேரம் நடந்தே பாதுகாப்பான ஓரிடத்தை அடைந்துள்ளார்கள்.
அதற்குப் பிறகு அவர்கள் உதவி கோரி அழைத்துள்ளார்கள்.
ஆனால், மோசமான வானிலை காரணமாக மீட்புக் குழுவினரால் ஹெலிகொப்டரில் கூட அந்த இடத்தைச் சென்றடைய முடியவில்லை. முகாமிட்டவர்களின் உணவு வாசனை கரடியைக் கவர்ந்திழுத்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.