நியூயார்க் நகரில் புதிய அச்சுறுத்தல்... பலர் அவசர உதவியை நாடியதால் பரபரப்பு
நியூயார்க் நகர அவசர சிகிச்சை மையத்திலிருந்து சிகிச்சைக்காக இரண்டு எபோலா நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உகாண்டாவிலிருந்து
குறித்த நோயாளிகள் இருவரும் ஆபத்தான மற்றும் குணப்படுத்த முடியாத எபோலா நோயின் அறிகுறிகளுடன் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஞாயிறன்று பகல் சுமார் 11.16 மணிக்கு தொடர்புடைய நோயாளிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நோயாளிகள் சமீபத்தில் உகாண்டாவிலிருந்து திரும்பியுள்ளதால், அவர்களுக்கு எபோலா தொற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர், மட்டுமின்றி அங்கு தற்போது எபோலா நோய் பரவி வருகிறது.
இந்த நிலையில், நோயாளிகள் பெல்லூவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு எபோலா இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
15,000 க்கும் மேற்பட்டவர்கள்
நோயாளிகள் எந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவில்லை, ஆனால் தொற்று நோரோவைரஸாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் அல்லது அசுத்தமான பொருட்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் எபோலா பரவுகிறது.
காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தசை வலி மற்றும் சில நேரங்களில் உட்புற மற்றும் வெளிப்புற இரத்தப்போக்கு ஆகியவை அறிகுறிகளாக கூறப்படுகிறது.
எபோலா நோயானது முதன்மையாக துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் ஏற்படுகிறது, 1976 இல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டதிலிருந்து 15,000 க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
உகாண்டாவில் கடைசியாக செப்டம்பர் 2022 இல் தொடங்கிய எபோலா பாதிப்பு, நான்கு மாதங்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட நேரத்தில் குறைந்தது 55 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |