சவப்பெட்டியிலிருந்து உயிர்த்தெழுந்த பெண் உண்மையில் மரணம்!
ஈக்குவடார் நாட்டில் சவப்பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த மூதாட்டி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
உயிருடன் சவப்பெட்டியில் இருந்த மூதாட்டி
கடந்த வாரம் வைரலான வீடியோ ஒன்றில் மூதாட்டி ஒருவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டார்.
நான்கு மணிநேரத்திற்கு பின் அவர் உயிருடன் எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈக்குவடார் நாட்டைச் சேர்ந்த பெல்லா மொன்டோயா என்ற 76 வயதான அந்த மூதாட்டி பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உண்மையில் மரணம்
இந்நிலையில் பாபாஹோயோ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் Stroke பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் பால்பெரன் கூறுகையில், 'இந்த முறை என் தாயார் உண்மையில் உயிரிழந்து விட்டார்' என தெரிவித்துள்ளார். மண்டல சுகாதாரத்துறையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
முதன்முறை பெல்லா எப்படி உயிரிழந்ததாக தவறுதலாக அறிவிக்கப்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |