பட்டப்பகலில் இளம் அரசியல்வாதிக்கு ஏற்பட்ட முடிவு: பொதுமக்கள் மத்தியில் நடந்த கொடூரம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் பெண் கவுன்சிலர் ஒருவர் பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது நடவடிக்கைகள்
ஈக்வடார் நாட்டில் Naranjal நகர கவுன்சிலரான 29 வயது Diana Carnero என்பவரே பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டவர். கவுன்சில் கூட்டம் முடித்து புதன்கிழமை மதியத்திற்கு மேல் சாலையின் மோசமான நிலை குறித்து காணொளி ஒன்றை பதிவு செய்து வந்தபோது அவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
@facebook
மோட்டார் சைக்கிளில் அவரை நெருங்கிய இரு மர்ம நபர்கள், துப்பாக்கியால் அவரது தலையில் சுட்டுவிட்டு மாயமாகியுள்ளனர். விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருந்தும், இதுவரை கைது நடவடிக்கைகள் எதும் முன்னெடுக்கப்படவில்லை.
போதை மருந்து கடத்தல் குழுவினரால் ஈக்வடாரில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
@facebook
இரண்டு வாரங்கள் முன்னர் தான் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக ஜனாதிபதி Daniel Noboa அறிவித்திருந்தார். பெரும்பாலான மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். பாடசாலைகள் அங்காடிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பெரும் நகரங்களில் ராணுவம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |