இலங்கை அகதிகளை சிக்கலுக்குள்ளாக்கிய உளவாளிக்கு புடின் செய்துள்ள உதவி
சர்ச்சைக்குரிய நபர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுக்கிறோம் என்பது தெரியாமல் உளவாளி ஒருவருக்கு உதவி செய்த இலங்கையர்கள் சிலர் சிக்கலுக்குள்ளானார்கள்.
அந்த நபருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒரு மிகப்பெரிய உதவியை செய்துள்ளார்.
தாங்கள் ஒரு சர்ச்சைக்குரிய நபருக்கு அடைக்கலம் கொடுக்கிறோம் என்பது தெரியாமல் ஒருவருக்கு உதவ முன்வந்ததால் சிக்கலுக்குள்ளாகிய இலங்கை அகதிகளை நினைவிருக்கலாம்.
2016ஆம் ஆண்டு ’Snowden’ என்ற திரைப்படம், ஹாலிவுட்டில் வெளியானது. அந்த படம், அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனைப் பற்றிய படம்.
அந்த படத்தில், ஸ்னோடெனுக்கு, ஹொங்கொங்கில் சட்டத்தரணி ஒருவரும் இலங்கை அகதிகள் சிலரும் உதவும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், அந்த அகதிகள் சிக்கலுக்குள்ளானார்கள். உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனை அமெரிக்கா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
அவர் ஹொங்கொங்கிலிருந்து தப்பி ரஷ்யாவுக்கு சென்று அங்கேயே வசித்துவந்தார்.
Credit: Reuters
இந்நிலையில், அமெரிக்கா எது செய்தாலும் அதற்கு எதிராக எதையாவது செய்யும் ரஷ்ய ஜனாதிபதி புடின், அமெரிக்க உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனுக்கு ரஷ்யக் குடியுரிமை வழங்கியுள்ளார்.
2020ஆம் ஆண்டு, ரஷ்யா ஸ்னோடெனுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்று அவருக்கு ரஷ்யக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
Credit: AP
உளவு பார்த்த குற்றத்துக்காக ஸ்னோடெனை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க அமெரிக்க அதிகாரிகள் முயற்சி செய்துவந்த நிலையில், உக்ரைன் போரில் அமெரிக்கா முதலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருவதால் எரிச்சலடைந்துள்ள புடின், அமெரிக்காவுக்கு எரிச்சலூட்ட, அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியான ஸ்னோடெனுக்கு ரஷ்யக் குடியுரிமை வழங்கியுள்ளார்.
ஸ்னோடென் அமெரிக்காவிடம் சிக்கினால், அவர் மீதான உளவு பார்த்தல் முதலான குற்றச்சாட்டுகளுக்காக,அவர் 30 ஆண்டுகள் வரை சிறையில் செலவிட நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
picture -(allance/p.a) Russell