பாலஸ்தீன மக்களை ஏற்றுக் கொள்ள முடியாது: மறுப்பு தெரிவித்துள்ள முக்கிய நாடுகள்
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து புலம்பெயர்ந்து வரும் நபர்களை ஏற்றுக் கொள்ள ஜோர்டான் மறுப்பு தெரிவித்துள்ளது.
வெளியேறும் பாலஸ்தீன மக்கள்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே தீவிரமான சண்டை நடைபெற்று வரும் நிலையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் காசா பகுதியில் இருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை ஜோர்டான் ஏற்றுக் கொள்ளாது என ஜோர்டான் மறுப்பு தெரிவித்துள்ளது.
Jordan has refused to accept refugees from the Gaza Strip
— NEXTA (@nexta_tv) October 17, 2023
"It is a red line. No more Palestinian refugees, neither in Jordan nor in Egypt. This problem should be solved inside the Gaza Strip and the Palestinian territories in the West Bank [Jordan , it should not be… pic.twitter.com/1gCC8o99PN
இது தொடர்பாக பெர்லினில் செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, இது ஒரு சிவப்பு கோடு, அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை காசா பகுதியிலும் அல்லது மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளிலும் தீர்க்கப்பட வேண்டும்.
அதை மற்ற நாடுகளுக்கு மாற்றக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளை சாடிய எகிப்து
இதற்கிடையில் பாலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க எகிப்து தயாராக உள்ளது, ஆனால் பாலஸ்தீனத்தில் இருந்து புலம்பெயர்ந்து வரும் மக்களை ஏற்றுக் கொள்ள காசா தயாராக இல்லை என பைனான்சியல் டைம்ஸ் எழுதியுள்ளது.
எகிப்து அதிகாரிகள் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் பேசிய உரையாடல் குறித்த தகவல்களில் பைனான்சியல் டைம்ஸ் வழங்கிய தகவலில், "நாங்கள் 1 மில்லியன் மக்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படி என்றால் அவர்களை நான் ஐரோப்பாவிற்கு அனுப்பப் போகிறேன்.
மனித உரிமைகள் குறித்து மிகவும் அக்கறை கொண்டுள்ள நீங்கள் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்" என எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |