தித்திக்கும் சுவையில் இலை அடை.., இலகுவாக செய்வது எப்படி?
இந்த தேங்காய் கொழுக்கட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஓர் இனிப்பு வகை.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெல்லம்- ¾கப்
- நெய்- 3 ஸ்பூன்
- தேங்காய் துருவல்- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- அரிசி மாவு- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- வாழை இலை- 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதில் வெல்லம் சேர்த்து கிளறவும்.
வெல்லம் நன்கு கெட்டியாகி வந்ததும் இதில் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி ஆறவைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு மற்றும் சிறிதளவு நெய் செய்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாழை இலையில் நெய் தடவி பிணைந்து வைத்த மாவை வட்டமாக திரட்டி அதில் தேங்காய் கலவையை வைத்து மடிக்கவும்.
இறுதியாக இதனை இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வைத்து வேகவைத்து எடுத்தால் இலை அடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |