நடைபாதையில் மோட்டார் சைக்கிளுடன் நுழைந்த நபர்: வைரலான வயதான பெண்மணியின் செயல்
இந்தியாவின் கேரள மாநிலத்தில், சாலையில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் அதைத் தவிர்ப்பதற்காக, பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நடைபாதையில் ஸ்கூட்டருடன் நுழைந்தார் ஒருவர்.
வைரலான வயதான பெண்மணியின் செயல்
அப்போது அவ்வழியே வந்த வயதான பெண்மணி ஒருவர், அந்த ஸ்கூட்டரில் வந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அப்படியும், அந்தப் பெண்ணைத் தாண்டி ஓரமாக சென்றுவிட அந்த நபர் முயன்றுள்ளார்.
ஆனால், அவரை விடாத அந்தப் பெண்மணி, குறுக்கே நின்றதுடன், அவரை பின்னோக்கிச் சென்று சாலையில் வாகனத்தை செலுத்துமாறு உறுதியாகக் கூற, அவரது உறுதியைக் கண்ட அந்த நபர் பின்னோக்கிச் சென்று சாலையில் போக்குவரத்து சிக்னலில் நிற்பதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
கேரள மோட்டார் வாகனத்துறை பகிர்ந்துள்ள அந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அந்த வீடியோவிலிருக்கும் பெண்மணியை அடையாளம் காண உதவுமாறு துறைசார் அதிகாரிகள் சமூக ஊடகவாசிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கேரளா மோட்டார் வாகனங்கள் சட்டப்படி நடைபாதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |