வெளிநாட்டில் சிறுமி அளித்த திடுக்கிடவைக்கும் புகார்... நாடுகடத்தப்படும் நிலையில் 92 வயது பிரித்தானியர்
பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் தனியாக வசித்துவரும் 92 வயது முதியவர் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தக்கப்டும் நெருக்கடியை எதிர்கொள்கிறார்.
13 வயது சிறுமி அளித்த புகார்
லீட்ஸ் பகுதியில் குடியிருக்கும் 92 வயது எட்வின் ஹோம்ஸ் என்பவர் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் 13 வயது சிறுமி அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
@Sainsbury
நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொள்ளும் மிகவும் வயதான பிரித்தானியர் இவர் எனவும் கூறுகின்றனர். எட்வின் ஹோம்ஸ் தொடர்பில் குறித்த சிறுமி அளித்த புகாரில், 2008 முதல் 2014 வரையான காலகட்டத்தில் அவரால் தாம் தொடர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக குறிப்பிட்டுள்ளார்.
லீட்ஸ் பகுதியில் வசித்து வந்தாலும், ஹோம்ஸின் மகளும் பேரப்பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவிலேயே குடியிருந்து வருகின்றனர். திருமணம் முடிந்து 46 ஆண்டுகளுக்கு பின்னர் ஹோம்ஸின் மனைவி, 2006ல் மரணமடைந்துள்ளார்.
76 வயதில் ஹோம்ஸ் பணி ஓய்வு பெற்ற பின்னர் தனியாகவே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் 2017ல் இரக்க குணம் கொண்ட Sainsbury ஊழியர் ஒருவர் ஹோம்ஸுடன் கிறிஸ்துமஸ் இரவு விருந்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
10 ஆண்டுகள் வரையில் சிறை
ஹோம்ஸ் தனியாக வாழ்ந்து வருவதை அறிந்தே, குறித்த பெண் ஊழியர் அவருடன் கிறிஸ்துமஸ் விருந்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது குறித்த பெண் ஊழியருக்கு 22 வயது என்றே தற்போது தெரியவந்துள்ளது.
@Sainsbury
இந்த நிலையில் தான், சிறுமி அளித்திருந்த புகாரின் அடிப்படையில் 2020ல் ஹோம்ஸ் கைதாகியுள்ளார். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை அவுஸ்திரேலிய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்து, உள்விவகார அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
அப்போதைய உள்விவகார செயலர் பிரிதி பட்டேலும் இந்த விவகாரத்தில் ஒப்புதல் அளித்திருந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள இந்த வழக்கு தொடர்பில், முதுமை மற்றும் நோயை காரணமாக குறிப்பிட்டு தம்மை அவுஸ்திரேலியாவிடம் ஒப்படைப்பதை தவிர்க்க வேண்டும் என ஹோம்ஸ் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.