ஒரே நாளில் 40,000 பவுண்டுகள் மின் கட்டணமா? அதிர்ச்சியில் உறைந்து போன பிரித்தானிய தாயார்
பொதுவாக நாள் ஒன்றுக்கு அவரது மின் பயன்பாடு 1.80 பவுண்டுகள் என்ற கணக்கிலேயே இருக்கும்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள தமக்கு அரை மணி நேரத்திற்கு மேலானது என்றார் அவர்.
பிரித்தானியாவில் இளம் தாயார் ஒருவர், ஒரே நாளில் 40,000 பவுண்டுகள் கட்டணமாக செலுத்தும் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தியுள்ளதாக அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
ஒரு குழந்தைக்கு தாயாரான 25 வயது Chloee Miles Prior என்பவரே அந்த பெருந்தொகை கண்டு அதிர்ந்து போனவர். காலையில் கண்விழித்தவர் தற்செயலாக தமது SSE smart meter-ஐ கவனிக்க, அதில் 42,810.20 பவுண்டுகள் என மின் கட்டணம் பதிவாகியிருந்தது.
பொதுவாக நாள் ஒன்றுக்கு அவரது மின் பயன்பாடு 1.80 பவுண்டுகள் என்ற கணக்கிலேயே இருக்கும். ஆனால் திடீரென்று பெருந்தொகை மீற்றரில் பதிவாகியிருக்கவும் அவர் ஒரு கணம் பயந்து போயுள்ளார்.
@mirror
தமக்கு மாரடைப்பு வந்துவிடுமோ எனவும் அவர் அஞ்சியுள்ளார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள தமக்கு அரை மணி நேரத்திற்கு மேலானது என்றார் அவர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தான் மேற்கு சசெக்ஸ், பெட்வொர்த் பகுதியில் இவர் குடியிருந்து வருகிறார்.
அதுமட்டுமின்றி, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மிக கவனமாகவே மின்சாரம் பயன்படுத்தியும் வந்துள்ளார். இதனால் மாதம் ஒன்றிற்கு பொதுவாக 46 பவுண்டுகள் மின் கட்டணமாகவும், எரிவாயு பயன்பாட்டிற்காக 11 பவுண்டுகளும் செலுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், பெருந்தொகை கட்டணமாக பதிவாகியுள்ளதை அடுத்து, அவர் இணையத்தில் ஏதேனும் காரணம் பதிவாகியுள்ளதா என தேடியுள்ளார்.
இருப்பினும் அவருக்கு அதற்கான விடை கிடைக்கவில்லை என்றே தெரியவந்துள்ளது.