2035-க்குள் 7.6 பில்லியன் டொலரை எட்டும் மின்காந்த ஆயுத சந்தை
2035-க்குள் மின்காந்த ஆயுத சந்தையின் மதிப்பு 7.6 பில்லியன் டொலரை எட்டும் என கணிக்கப்படுகிறது.
மின்காந்த ஆயுதங்கள் தொடர்பான உலக சந்தை, 2025-ல் 1.1 பில்லியன் டொலராக இருந்து, 2035-ல் 7.6 பில்லியன் டொலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆண்டுக்கு 21.6 சதவீத வளர்ச்சி விகிதத்தை (CAGR) காட்டும் முக்கிய முன்னேற்றமாகும்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளங்களில் உயர் சக்தி மின்னணு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் இந்த வளர்ச்சி ஏற்படுகிறது.

2020-2024 காலப்பகுதியில், இந்த ஆயுதங்கள் சோதனை கட்டத்தில் இருந்தன. 2025-ல் சந்தை பரவலாக ஏற்கத்தக்க நிலையில் மாறியுள்ளது.
2025-2030 காலத்தில், நிலையான வளர்ச்சி ஏற்பட்டு, 20235-க்குள் சந்தை முழுமையாக ஒருங்கிணைந்த கட்டத்தை அடையும்.
வளர்ச்சிக்கான முக்கிய காரணங்கள்
- தேசிய பாதுகாப்பு பட்ஜெட்கள் மாற்றம் நவீனமயமாக்கல் திட்டங்கள்
- உயிர் சக்தி திசை மாற்றும் ஆயுதங்கள்
- ரேடார், தொடர்பு மற்றும் வான்வழி அமைப்புகள்
- தானியங்கி கட்டுப்பாடு மற்றும் உணரிகள் ஒருங்கிணைப்பு
தொழில்நுட்ப ரீதியில், Particle Beam Weapons (PBW) 49.3 வருமானத்தை உருவாக்கும் முக்கிய பிரிவாகும். இராணுவ பயன்பாடுகள் 61.2 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
Crowd control மற்றும் electronic disruption ஆகியவற்றுக்கான non-lethal ஆயுதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிராந்திய ரீதியில், சீனா (29.2% CAGR), இந்தியா (27%) மற்றும் ஜேர்மனி (24.8%) ஆகியவை வேகமாக வளர்ந்து வருகின்றன.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் முன்னணி நிறுவங்களால் வழிநடத்தப்படுகின்றன.
Lockheed Martin, BAE Systems, Boeing போன்ற நிறுவனங்கள் இந்த சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |