உக்ரைனுக்கு மீண்டும் துணிச்சலாக உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் செய்த உதவி! ரஷ்யாவிற்கு கடுப்பு தான்
ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக மேலும் 15 ஆயிரம் இணையதள கருவிகளை அனுப்பி உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் 4வது மாதத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
இதேபோல் நம்பர் 1 உலக பணக்காரரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ,உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது.
இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார். ஏற்கனவே உக்ரைனுக்கு உதவி செய்வதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து எலான் மாஸ்குக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இது போன்ற அச்சுறுத்தல் தகவல்களையும் மீறி எலான் மஸ்க் மீண்டும் உக்ரைனுக்கு உதவிகரம் நீட்டியுள்ளார்.