ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து திடீரென விலகிய எலோன் மஸ்க்! அவரே வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் விலகுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
DOGE செயல் தலைவர்
அமெரிக்க அரசின் நிர்வாக செலவினங்களை குறைக்க 'DOGE' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் அதன் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ட்ரம்ப் அளித்த இந்த பதவியில் 130 நாட்கள் பணியாற்ற எலோன் மஸ்க் ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அதிரடியாக நிர்வாகத்தில் அவர் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, அரசு செலவுகளை குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.
ரூ.34,000 கோடி
இதன்மூலம் அமெரிக்க அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து இந்திய மதிப்பில் ரூ.34,000 கோடி வரை குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக எலோன் மஸ்க் (Elon Musk) திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது; தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
As my scheduled time as a Special Government Employee comes to an end, I would like to thank President @realDonaldTrump for the opportunity to reduce wasteful spending.
— Elon Musk (@elonmusk) May 29, 2025
The @DOGE mission will only strengthen over time as it becomes a way of life throughout the government.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |