நினைவை அழிக்க கூடிய செடிகளை வளர்த்த எப்ஸ்டீன் - இந்து புராணத்திலும் உள்ள மலர்
நினைவாற்றலை அழிக்க கூடிய செடிகளை எப்ஸ்டீன் வளர்த்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் ஆவணங்கள்
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர் மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான பக்க ஆவணங்களை வெளியிட்டு வரும் நிலையில், அதில் பல பிரபலங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில், நினைவாற்றாலை அழிக்கக்கூடிய விஷமுள்ள செடிகள் குறித்து எப்ஸ்டீன் ஆர்வம் காட்டியது தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
எப்ஸ்டீன் நர்சரியில் டிரம்பெட்
மார்ச் 3, 2014 தேதி ஆன் ரோட்ரிக்ஸ் என்ற நபருக்கு எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சலில், "நர்சரியில் எனது டிரம்பெட் செடிகளைப் பற்றி கிறிஸிடம் கேளுங்கள்?" என குறிப்பிட்டுள்ளார்.
Jeffrey Epstein grew "Trumpet Plants" which are also referred to as "Devil's Breath" because it contains scopolamine. Scopolamine is a drug that has historically been used by CIA and drug cartels. Under its influence a person does whatever one is told without EVER remembering.🔥 pic.twitter.com/AwQHuwGAyQ
— Kirby Sommers (@LandlordLinks) February 15, 2026
இதன் மூலம் அவர் தனது நர்சரியில் டிரம்பெட் செடிகளை(Trumpet Plants) வளர்த்தது உறுதியாகியுள்ளது.
மற்றொரு மின்னஞ்சலில், புகைப்படக் கலைஞர் அன்டோயின் வெர்க்லாஸ், 'ஸ்கோபொலமைன்: கொலம்பியாவின் காடுகளில் வளரும் சக்திவாய்ந்த மருந்து, இது சுதந்திரத்தை நீக்குகிறது' என்ற தலைப்பில் எப்ஸ்டீனுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.

அதில், டெய்லி மெயில் மற்றும் வைஸ் இதழில் வெளியான கட்டுரை, ஸ்கோபொலமைன்(scopolamine) என்பது மக்களை 'மிகவும் தூண்டக்கூடியதாக' மாற்றக்கூடிய ஒரு பொருள் என்று விவரித்தது.
"நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அவர்களை வழிநடத்தலாம். அவர்கள் ஒரு குழந்தை போல இருக்கிறார்கள் என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி 7, 2022 அன்று கில்லர்மோ ஃபரினாஸ் என்பவர் ஜுவான் அன்டோனியோ கோன்சலஸுக்கு "பாதிக்கப்பட்டவர் மீதான தாக்க அறிக்கை" என்ற மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.

டிசம்பர் 2014 அன்று நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். அதில், ட்ரம்பெட் தாவரங்கள் உட்பட பல்வேறு தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் ட்ரோபேன் ஆல்கலாய்டான ஸ்கோபொலமைனுடன் போதைப்பொருள் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அவரை ஓட்டிச் சென்ற 2 பேர், "நான் அவருக்கு அந்த ஸ்கோபொலமைனை நிறையக் கொடுத்தேன்!" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. இதனால் நினைவாற்றல் இழப்பு மற்றும் தீவிர மயக்கம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறாக எப்ஸ்டீன் ஆவணங்களில் 3 முறை ட்ரம்பெட் தாவரங்கள் இடம் பெற்றுள்ளது.
டிரம்பெட் தாவர விளைவு
"ட்ரம்பெட் செடி" என்பது பல்வேறு வகையான டிரம்பெட் வடிவ பூக்களுக்குப் பயன்படுத்தப்படும் பொதுவான பெயர் ஆகும். இவை ஏஞ்செல்ஸ் டிரம்பெட், டெவில்ஸ் டிரம்பெட் அல்லது டதுரா எனப்படும் சிறிய, மூலிகை தாவரங்களையும் குறிக்கிறது.
இது இரவில் அதிக மணம் கொண்டவை, ஆனால் உட்கொண்டால் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இவை ஸ்கோபொலமைன், அட்ரோபின் மற்றும் ஹையோசைமைன் போன்ற 'ட்ரோபேன் ஆல்கலாய்டுகள்' சேர்மங்களைக் கொண்டுள்ளன.

இந்த ஸ்கோபொலமைன் முறையான மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இயக்க நோய் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய குமட்டலுக்கு சிகிச்சையளிக்க இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குழப்பம், கிளர்ச்சி, மங்கலான பார்வை மற்றும் கடுமையான நினைவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்தும். தீவிர நிகழ்வுகளில் உட்கொள்வது கோமா அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தும்.
கொலம்பியா மற்றும் தென் அமெரிக்காவின் பிற பகுதிகளில், கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஸ்கோபொலமைன் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கனவு போன்ற உணர்வு, இணக்கமான உணர்வு மற்றும் நிகழ்வுகளை எதிர்க்கவோ அல்லது நினைவுகூரவோ முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.
ஸ்கோபொலமைன் பெரும்பாலும் மறைமுகமாக செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தூள் வடிவத்தில்,மணமற்றது மற்றும் சுவையற்றது. இதனால், குடிக்கும் பானங்களில் கலப்பதோ அல்லது ஒருவரின் முகத்தில் ஊதுவதோ எளிதானது.
ஒருமுறை உட்கொண்டால், மருந்து விரைவாகச் செயல்பட்டு சுமார் 12 மணி நேரத்திற்குள் உடலை விட்டு வெளியேறி விடும். இதனால் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளில் அதைக் கண்டறிவது கடினம்.
இந்து புராணங்களில்..
டிரம்பெட் தாவரம் இந்து புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. டதுரா என்று அழைக்கப்படும் இந்த மலர் அண்டப் பெருங்கடலைக் கலக்கும் போது, அழியாமையின் அமிர்தத்திற்கு முன் விஷம் வெளிப்பட்டபோது இது வெளிப்பட்டது.

பிரபஞ்சத்தைக் காப்பாற்ற சிவன் கொடிய விஷத்தை உட்கொண்டார், அதை தனது தொண்டையில் வைத்திருந்தார், அது நீல நிறமாக மாறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மலர் சிவ வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |