பேரிடரால் பாதிக்கப்பட்ட 3 நாடுகள்: € 144.1 மில்லியன் அவசரகால நிதியை ஒதுக்கீடு செய்த ஐரோப்பிய ஒன்றியம்
பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சுமார் 144.1 மில்லியன் யூரோக்களை அவசரகால நிதி உதவியாக வழங்கி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
அவசர கால நிதி உதவி
2025ம் ஆண்டு கடுமையான காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின், ருமேனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு இயற்கை பேரிடரை சமாளிக்க சுமார் 144.1 மில்லியன் யூரோக்களை அவசரகால நிதி உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த நிதியுதவி தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 642 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்த நிதியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை நிதியிலிருந்து வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிதியானது பாதிக்கப்பட்ட நாடுகளின் உள்கட்டமைப்பு சீரமைப்பு, தற்காலிக வீடு வழங்குதல், மீட்பு மற்றும் தூய்மை பணிகளுக்காக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி
ஸ்பெயின் நாட்டிற்கு சுமார் 120.55 மில்லியன் யூரோக்களை அவசரகால நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஸ்பெயின் கடுமையான வறட்சி மற்றும் வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 243 காட்டுத்தீ சம்பவங்களை எதிர்கொண்டது, ஆகஸ்ட் 8ம் திகதி தொடங்கிய காட்டுத்தீ சம்பவத்தில் 8 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ரூமேனியாவிற்கு சுமார் 14.34 மில்லியன் யூரோக்களை அவசரகால நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூமேனியா மே மாத இறுதி மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் கடுமையான வெள்ள பாதிப்புகளை எதிர்கொண்டது.
இதில் பிரைடு உப்புச் சுரங்கம் உட்பட பல இடங்களின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
சைப்ரஸ் நாட்டிற்கு சுமார் 9.21 மில்லியன் யூரோக்களை அவசரகால நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஃபோஸ் மற்றும் லிமாசோல் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ மிகப்பெரிய சேதத்தை அந்நாட்டிற்கு ஏற்படுத்தியது. இதில் 2 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய நிதி ஒதுக்கீட்டிற்கு முன்னதாகவே ஸ்பெயினுக்கு 130 மில்லியன் யூரோக்களும், சைப்ரஸ் நாட்டிற்கு 2.3 மில்லியன் யுரோக்களும் மீட்பு பணிகளுக்காக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |