ஒரே பாலின திருமணத்துக்கு ஐரோப்பிய நாடு ஒன்று அனுமதி: அடுத்த ஆண்டு முதல் புதிய சட்டம் அமுல்
ஒரே பாலினங்களை சேர்ந்த இரண்டு நபர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ சட்டத்தை எஸ்தோனியா நாட்டு அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
அதிகாரப்பூர்வ சட்டம்
ஐரோப்பிய நாடான எஸ்தோனியாவில் ஒரே பாலினத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள் இணைந்து திருமணம் செய்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை அந்த நாட்டு அரசாங்கம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
55 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஒரே பாலின திருமணத்துக்கு 34 பேர் ஆதரவு வழங்கியுள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் புதிய சட்டம்
ஒரே பாலின திருமணம் தொடர்பாக ஏற்றப்பட்டுள்ள புதிய சட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எஸ்தோனிய நாட்டு பிரதமர் காஜா கல்லாஸ் (Kaja Kallas) தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள தகவலில், காதல் அனைவரிடமும் உள்ளது, அனைவரது உரிமைகளும் மதிக்கப்பட்டு சுதந்திரமாக மக்கள் வாழும் நேசிக்கக்கூடிய சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |