குழந்தைகளுக்கான முதல் கோவிட்-19 தடுப்பூசி: ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
5 முதல் 11 வயது குழந்தைகளுக்கான முதல் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம் அளித்துள்ளது.
ஐரோப்பிய கண்டம் முழுவதும் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து ஒழுங்குமுறை குழுவான EMA, 5 மற்றும் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கான Pfizer-BioNTech கோவிட்-19 தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
முன்னதாக Pfizer-BioNTech கோவிட்-19 தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு வழங்க ஒப்பல் அளிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் இப்போது 5 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 முதல் 11 வயதுள்ள பிள்ளைகளுக்கு 10 மைக்ரோகிராம் அளவுகளில் Pfizer தடுப்பு மருந்து கொடுக்கப்படும். குறிப்பாக மேல் கையில் (Upper Arm) செலுத்தப்படவேண்டும்.
அதேபோல், ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) பரிந்துரைப்பதன்படி, இரண்டாவது டோஸுக்கான இடைவெளி 3 வாரங்கள் இருக்கவேண்டம்.
Photo: AP
5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான மருத்துவ பரிசோதனையில், இந்த மருந்து கொரோனா வைரஸுக்கு எதிராக 90.7% செயல்திறனைக் காட்டியது. அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும், உடனடியாக குழைந்தைகளுக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
டிசம்பர் 20-ஆம் திகதி முதலில் குறைந் அளவிலான குழந்தைகளுக்கு இந்த Pfizer தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என BioNTech இன் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.