அரசு அலுவலகங்களில் மத அடையாளங்கள்... தடை செய்யலாம்: ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பு
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்களில் நடுநிலைமையை பேணும் பொருட்டு ஊழியர்கள் மத அடையாளங்களை அணிவதை தடை செய்யலாம் என முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தடைகள் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்
அத்தகைய கட்டுப்பாடுகள் அனைத்து ஊழியர்களுக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் சட்டப்பூர்வ சூழலுக்குள் பொருந்தும் வகையில் அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
Credit: Martin Argles
இது அரசு அலுவலகங்களில் மொத்த ஊழியர்களையும் சமமாம பாவிப்பதற்கான முதற்படி என்றும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தத்துவ ரீதியாக அல்லது மத நம்பிக்கைகளுடன் தொடர்புடைய ஆடைகள் அல்லது சின்னங்கள் மீதான தடைகள் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள ஒரு நகராட்சியில் முஸ்லிம் ஊழியர் ஒருவரை பணி நேரத்தில் முக்காடு அணிய வேண்டாம் என அறிவுறுத்திய நிலையிலேயே இந்த விவகாரம் நீதிமன்றத்தில் கொண்டுசெல்லப்பட்டது.
இருப்பினும், குறித்த முஸ்லிம் ஊழியர் அவரது பணி நேரத்தில் அதிகமாக பொதுமக்களுடன் தொடர்பில் இருப்பவரல்ல. இந்த நிலையில் அந்த நகராட்சி நிர்வாகம் பணியிடத்தில் மத அடையாளம் கூடாது என தடை செய்தது.
கருத்து சுதந்திரத்தை மீறும் வகையில் உள்ளது
இதையடுத்து, அந்த ஊழியர் உள்ளூர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார், தடையை பாரபட்சமானது மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமை மீறப்பட்டதாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே அரசு அலுவலகங்களில் நடுநிலைமையை பேணும் பொருட்டு ஊழியர்கள் மத அடையாளங்களை அணிவதை தடை செய்யலாம் என முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்தத் தீர்ப்பு சில இடங்களில் கவலையைத் தூண்டியுள்ளது. இந்த தீர்ப்பு மதம் மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறும் வகையில் உள்ளது என Femyso அமைப்பு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
இந்த Femyso அமைப்பின் கீழ் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |