101 மில்லியன் பவுண்டுகள் லொட்டரியில் வென்ற பிரித்தானிய தம்பதி: அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா?
பிரித்தானியாவில் 101 மில்லியன் பவுண்டுகள் லொட்டரியில் பரிசு வென்றார்கள் ஒரு தம்பதியர். ஆனால், அந்த பரிசு அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொண்டு வருவதற்கு பதில் தொல்லையையும் கஷ்டத்தையுமே கொண்டு வந்தது.
101 மில்லியன் பவுண்டுகள் லொட்டரியில் பரிசு
சில சந்தர்ப்பங்களில் லொட்டரியில் பரிசு விழுந்ததும், முகமூடியுடன் வந்து பரிசை வாங்கிச் சென்றதைக் குறித்த செய்திகளைக் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். சொல்லப்போனால், அவர்கள் செய்தது நியாயம்தானோ என்றே நினைக்கத் தோன்றுகிறது நடக்கும் விடயங்களைப் பார்த்தால்.
கிழக்கு எசெக்ஸில் வாழும் Dave, Angela Dawes தம்பதியருக்கு லொட்டரியில் 101 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.
இந்த தொகை பிரித்தானியாவிலேயே லொட்டரியில் கிடைத்த ஏழாவது பெரிய தொகையாகும்.
Credit: AFP
பரிசைத் தொடரும் பிரச்சினைகள்
ஆனால், இவ்வளவு பெரிய தொகை பரிசு கிடைத்தும், அது அவர்களுக்கு நிரந்தர சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. பிரச்சினை Daveஇன் மகன் வடிவில் வந்துள்ளது.
Daveஇன் மகனான Michael தந்தையிடம் பணம் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். அவருக்கு தந்தை 1.6 மில்லியன் பவுண்டுகள் கொடுத்தும் அவருக்கு அது போதுமானதாக இல்லை.
மேலும் மேலும் தந்தையை தொந்தரவு செய்ததுடன், அவரை நீதிமன்றத்துக்கும் இழுத்திருக்கிறார் Michael.
இன்னொரு பக்கம், திருடர்கள் வந்து தம்பதியரைக் கட்டிப்போட்டு பணம் மற்றும் காரைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.
Credit: PA:Press Association
அப்படியே துவங்கிய பிரச்சினைகள், ஆசைப்பட்டு வாங்கிய வீட்டை விற்று, முன்னர் வாழ்ந்த வீட்டை மாற்றி, இப்போது ஏதோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் Dave, Angela Dawes தம்பதியர்.
ஆக, பெரும் தொகை பரிசாக கிடைத்தும், மகிழ்ச்சியாக வாழமுடியவில்லை தம்பதியரால். பரிசு விழும் அனைவருக்கும் அது அதிர்ஷமாக அமைகிறதா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது இந்த தம்பதியரைப் பார்த்தால்...