ஐரோப்பாவில் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்! எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
ஐரோப்பாவில் இன்னும் சில மாதங்களில் கொரோனாவால் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலகில் ஒரு சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 5-வது அலை வரை சென்றுவிட்டது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பாவில் தற்போது நிலவும் நிலையே நீடித்தால், குளிா்காலம் கடந்து மாா்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்துக்குள், கூடுதலாக் 7 லட்சம் போ் கொரோனா பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என்று கணிக்கப்படுகிறது.
கொரோனாவுக்கு எதிரான மக்களின் நோயெதிா்ப்புத் திறன் குறைந்து வருவதற்கான ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதன் ஒரு பகுதியாக இன்னும் அதிகமானவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், மூன்றாவது தடுப்பூசி போட தகுதி இருந்தால், அதை போட்டுக் கொள்வது நல்லது என்று குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குநா் ஹன்ஸ் கிளக் கூறுகையில், ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் கொரோனா நிலவரம் மிக மோசமாக உள்ளது. மேலும், நாம் குளிா்காலத்தை எதிா்நோக்கியுள்ளோம்.
இது கொரோனா பரவல் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, நாம் சுகாதாரப் பணியாளா்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் மட்டும் கடந்த வெள்ளிக் கிழமை நிலவரப்படி, 13,86,773 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், 7,09,25,345 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.