ஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி: நதியில் வெளிப்பட்ட 2ஆம் உலகப்போர் காலத்து ஜேர்மன் போர்க்கப்பல்! புகைப்படங்கள் வைரல்
செர்பியாவில் நதி வறண்டதால் இரண்டாம் உலகப்போரில் மூழ்கிய ஜேர்மன் போர்க்கப்பல் வெளியே தென்பட்டுள்ளது.
அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன.
ஐரோப்பாவில் வறட்சியின் காரணமாக டான்யூப் நதியின் நீர்மட்டம் குறைந்து வருவதால், அதில் பல ஆண்டுகளாக மூழ்கிக்கிடந்த ராட்சத வெடிபொருட்கள் நிறைந்த இரண்டாம் உலகப்போர் காலத்து நாசி போர்க்கப்பல் வெளிப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்திவருகிறது. ஐரோப்பா அதற்கு விதிவிலக்கு அல்ல. பிரித்தானியா, ஜேர்மனி, போலந்து, ஹங்கேரி, ஸ்பெயின் என பல ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத வறட்சியை எதிர்கொண்டு வருகின்றன. வறட்சியால் நதிகளின் நீர்மட்டம் கடுமையாக குறைந்துள்ளது.
Image: Reuters
இந்நிலையில், செர்பியாவின் நதி துறைமுக நகரமான பிரஹோவோ அருகே, டானூப் நதியில் குறைந்த நீர்மட்டங்களுக்கு இடையே, இரண்டாம் உலகப் போரின் போது, மூழ்கடிக்கப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஜேர்மன் போர்க்கப்பல் ஒன்று வெளியே நன்றாகவே தென்பட்டுள்ளது.
தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பம், வலிமைமிக்க நதியான டானூப்பை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் அதன் மிகக் குறைந்த மட்டத்திற்கு தள்ளியுள்ளது.
Image: Reuters
போர்க்கப்பல்
இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், 1944-ஆம் ஆண்டில் சோவியத் படைகள் முன்னேறி பின்வாங்கும்போது, நாஜி ஜேர்மனியின் கருங்கடல் கடற்படையால் டான்யூப் வழியாக துண்டிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கப்பல்களில் ராட்சத கப்பல்களும் இருப்பதாக அறிவித்தது.
ஆற்றின் நீர்மட்டம் குறையும்போது, மூழ்கடிக்கப்பட்ட அந்தக் கப்பல்கள் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image: Reuters
டான்யூப் நதியின் ஒரு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ராட்சத கப்பல்கள் வெளிப்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் பல இன்னும் டன் கணக்கில் வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருப்பதாகவும், கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image: Reuters
Image: Reuters