ஐரோப்பாவில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு: விமானங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
ஐரோப்பாவில் மவுண்ட் எட்னா(Mount Etna) இன்று மீண்டும் வெடிக்க தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எரிமலை வெடிப்பு
ஐரோப்பாவின் மிகவும் தீவிரமான எரிமலையான மவுண்ட் எட்னா(Mount Etna) இன்று அதிகாலை 7.45 மணிக்கு மீண்டும் வெடிக்க தொடங்கியது.
இந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியை சுற்றிய வளிமண்டல பகுதி சாம்பல் மற்றும் புகை மூட்டத்தால் மூழ்கியது.
சிசிலியில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, கட்டானியா விமான நிலையம் தனது அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
#Etna Live - L'attività esplosiva del Cratere Voragine si sta gradualmente intensificando.
— Il Mondo dei Terremoti (@mondoterremoti) July 5, 2026
Sono in corso modeste emissioni di cenere che si disperdono in quota in direzione del settore sud-orietale del vulcano.
Video in diretta della webcam di Vincenzo Modica pic.twitter.com/8A7jUb9S1U
பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டு தோரும் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கு இந்த கட்டானியா விமான நிலையம் முக்கிய மையமாக உள்ளது.
ITA ஏர்வேஸ் என்ற இத்தாலியின் முன்னணி விமான நிறுவனம் கட்டானியா விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
Mount Etna erupting now in Sicily, Italy. pic.twitter.com/ScPqT5ixGr
— Weather Monitor (@WeatherMonitors) July 5, 2026
மவுண்ட் எட்னா எரிமலையின் உச்சிப் பள்ளங்களை இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வக நிறுவனம் ஆய்வு செய்து விமான பயணங்களுக்கான எச்சரிக்கை நிலையை சிவப்பாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு தொடர்பான புகைப்படங்களும் காணொளி காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |