ஐரோப்பிய யூனியன் தயாராக இருக்க வேண்டும்: ஆணைத்தின் தலைவர் உர்சுலா எச்சரிக்கை!
ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் எரிவாயு தேவையிலிருந்து ஐரோப்பிய நாடுகள் முழுவதுமாக வெளியேறிய தயாராக வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் Ursula von der Leyen ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து, பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் மீது பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து தங்களது எதிர்ப்பினை வெளிகாட்டினர்.
ஐரோப்பிய நாடுகளின் இந்த பொருளாதார தடைகளுக்கு பதிலடி வழங்கும் விதமாக ரஷ்யாவும், தங்களிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்யும் எரிவாயு அளவினை குறைத்தது.
European Commission President Ursula @vonderLeyen said Europe must be prepared for a complete stoppage of gas supplies from #Russia, which will happen "sooner or later". pic.twitter.com/DpGlZMvnr6
— NEXTA (@nexta_tv) July 25, 2022
இந்தநிலையில், ரஷ்யாவிடம் இருந்து பெறும் எரிவாயுவை முழுவதுமாக துண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராயிருக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கமிஷனின் தலைவர் Ursula von der Leyen ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சூழ்நிலை விரைவிலோ அல்லது தாமதமாகவோ யதார்த்தமான ஒன்றாக மாறும் எனவும் தெரிவித்தார்.
credit: AP
கூடுதல் செய்திகளுக்கு: வானில் இருந்து விழுந்து நொறுங்கிய சிறிய பயிற்சி விமானம்: மருத்துவமனையில் பெண் விமானி!
இதனைப்போலவே ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் தெரிவித்த கருத்தில், ரஷ்ய எரிப்பொருட்களை படிப்படியாக குறைத்து பசுமை மாற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.