இவர்களுக்கு மட்டும் மீண்டும் ஐரோப்பாவிற்குள் நுழைய அனுமதி! ஐரோப்பிய ஆணையம் புதிய திட்டம்
தடுப்பூசி போட்ட வெளிநாட்டு பயணிகளை கூடுதல் தடைகள் ஏதும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது.
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்ட அனைவரையும் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ளது.
நல்ல சுகாதார நிலைமை உள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கு மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் இரண்டு டோஸை போட்ட அனைவரையும் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ளது.
பயணிகள் தனிமைப்படுத்தல் அல்லது சோதனை போன்ற நடவடிக்கைகள் இல்லாமல் பயணிக்க தடுப்பூசி சான்று அவசியம்.
அதே நேரத்தில் எந்தெந்த தடுப்பூசிகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை அந்தந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே முடிவு செய்ய வேண்டும்.
பயணிகள் பயணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டாவது டோஸை போட்டிருக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.