ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் உர்சுலா வான் தெரிவு
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உர்சுலா வான் டெர் லேயன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜேர்மனியின் சிடியு கட்சியைச் சேர்ந்த உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) 2வது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 401 பேர் ஆதரவாகவும், 284 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 15 பேர் வாக்களிக்கவில்லை.
720 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட, வான் டெர் லேயனுக்கு குறைந்தபட்சம் 361 வாக்குகள் பெரும்பான்மை தேவை. ஆனால் அவர் 40 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
இதனையடுத்து, ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்ஸோலா (Roberta Metsola) லேயனின் வெற்றியை அறிவித்தார்.
ஜேர்மன் சேன்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், முன்னாள் போலந்து பிரதமர், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஷெரரால்டன்பெர்க் வான் டெர் லேயனை வாழ்த்தினர்.
மேலும், பிரித்தானிய பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், "பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான உறவை மீட்டமைக்க" வான் டெர் லேயனுடன் "நெருக்கமாக பணியாற்ற" விரும்புவதாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வான் டெர் லேயன் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். ஐரோப்பிய ஒன்றியம் அதன் எல்லைப் பாதுகாப்பு நிறுவனமான ஃபிரான்டெக்ஸை வலுப்படுத்தும் என்றும், ஒழுங்கற்ற இடம்பெயர்வுகளை முறியடிக்கும் என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ursula von der Leyen reelected as European Commission president scond time, European Commission president Ursula von der Leyen