தென்னாப்பிரிக்க விமானங்களுக்கு தடை - ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவில் இருந்து விமானப் பயணத்தை நிறுத்தும் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தலைவர் Ursula von der Leyen வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தென்னாப்பிரிக்க பிராந்தியத்திலிருந்து விமானப் பயணத்தைத் ரத்து செய்ய அவசரகால தடையை செயல்படுத்த முன்மொழிந்ததாகக் கூறினார்.
ஜேர்மனியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் இந்த பயணத் தடையை செயல்படுத்தப்படலாம் என்பதையும் வான் டெர் லேயன் கூறினார்.
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு அதன் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் காரணமாகவும், அந்நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான Gauteng-ல் உள்ள இளைஞர்களிடையே விரைவாக பரவ தொடங்கியதாலும், இது மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமை காரணமாக, தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பும் விமானங்கள் ஜேர்மன் குடியிருப்பாளர்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்றும், அவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் ஜேர்மனியின் மத்திய சுகாதார அமைச்சராக இருக்கும் ஜென்ஸ் ஸ்பான் கூறினார்.
அதேப்போல், இத்தாலியும் கடந்த 14 நாட்களுக்குள் தென்னாப்பிரிக்கா, லெசோதோ, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஈஸ்வதினி உள்ளிட்ட 7 தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றிற்கு பயணம் செய்திருந்தால், அவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும் நடைமுறைகளை இத்தாலியின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்திலும் இதே போன்ற நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன. தென்னாப்பிரிக்கா மற்றும் மற்ற ஐந்து தென்னாப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் தடைசெய்யப்படும் என்றும், அந்த நாடுகளில் இருந்து வந்த அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கிலாந்து அறிவித்தது.
தற்போது B.1.1.529 என அழைக்கப்படும் புதிய கோவிட் மாறுபாடு தென்னாப்பிரிக்காவிலிருந்து போட்ஸ்வானா மற்றும் ஹொங்ஹொங்கில் உள்ள சுற்றுலா பயணிகளிடம் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய டெல்டா மாறுபாட்டை விட இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியதாகவும், தற்போதுள்ள தடுப்பூசிகள் அதற்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர.