கூடுதலாக 100 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை ஆர்டர் செய்த ஐரோப்பிய ஒன்றியம்!
இந்த ஆண்டு மேலும் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஐரோப்பிய ஒன்றியம் ஆர்டர் செய்துள்ளது.
ஜேர்மன்-அமெரிக்க மருந்து நிறுவனங்களான பயோஎன்டெக் மற்றும் பைசர், 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கூடுதலாக 100 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை விநியோகம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2021 தொடக்கத்திலிருந்து ஏற்கெனவே 500 மில்லியன் டோஸ்களை ஆர்டர் செய்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 100 மில்லியன் டோஸ்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மொத்தம் 600 டோஸ்களில் 25 சதவீதம் மருந்துகளை வரும் காலாண்டில் வழங்குவதாக இரு நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன.
சுமார் 450 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுவரை 105 மில்லியன் டோஸ்கள் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது அந்நாடுகள் தடுப்பூசி திட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை குறிக்கிறது.
தடுப்பூசி நிறுவனங்களின் ஒப்புதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.