உக்ரைன் பகுதியை ரஷ்யாவாக அறிவித்தது கண்டிக்கதக்கது: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு
உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்து இருப்பதை உறுதியாக கண்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு.
உலகளாவிய பாதுகாப்பை ரஷ்யா ஆபத்தில் ஆழ்த்துகிறது எனவும் குற்றச்சாட்டு.
ரஷ்யாவின் சட்டவிரோத வாக்கெடுப்புகளை ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமையான இன்று கிரெம்ளின் நடைபெற்ற இணைப்பு விழாவில் கலந்து கொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைனிடம் இருந்து கைப்பற்ற கெர்சன், லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் மற்றும் Zaporizhzhia ஆகிய நான்கு பகுதிகளையும் ரஷ்யாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைவதாக அறிவித்தார்.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை கிரெம்ளின் விழாவில் ஆற்றிய உரையில் ரஷ்யாவிற்கு நான்கு புதிய பகுதிகள் இருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துள்ளதை உறுதியாகக் கண்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைனிய பகுதிகளில் நடத்தப்பட்ட சட்டவிரோத வாக்கெடுப்புகளை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என்றும் மாஸ்கோ மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதன் தடைகளை கடுமையாக்குவோம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சார்பாக ஐரோப்பிய கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச ஒழுங்கை ரஷ்யா வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன் உலகளாவிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது எனவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்கு புதிதாக நான்கு பகுதிகள்: கிரெம்ளின் இணைப்பு விழாவில் ஜனாதிபதி புடின் அறிவிப்பு
அத்துடன் ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் எங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாங்கள் வலுப்படுத்துவோம்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அழுத்தத்தை மேலும் அதிகரிப்போம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.