மத்திய கிழக்கில் ஒவ்வொரு அமெரிக்கரும்... ஈரானிய ஊடகங்களின் பகீர் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அல்லது இராணுவ வீரர்களும் தற்போது ஈரானின் இலக்கில் இருப்பதாக அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் முடிவுக்கு கொண்டுவரும்
ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் தளங்கள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை முன்னெடுத்ததன் பின்னர் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. சமூக ஊடகத்தில் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துவரும் அந்த காணொளியில்,
ஈரானிய ஊடகவியலாளர் ஒருவர், ட்ரம்பால் துவக்கப்பட்டுள்ள இந்த மோதலை ஈரான் முடிவுக்கு கொண்டுவரும் தருணம் இதுவென குறிப்பிடுகிறார். ஈரானின் வான்வெளியை அத்துமீறி நுழைந்ததன் மூலம் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்துள்ளது.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இப்படியான அத்துமீறல்களுக்கு இடமில்லை. அமெரிக்க ஜனாதிபதி அவர்களே, நீங்கள் அதைத் தொடங்கினீர்கள், நாங்கள் அதை முடிப்போம் என அந்த ஊடகவியலாளர் எச்சரித்துள்ளார்.
JUST IN: Iranian state television displays a graphic of U.S. bases in the Middle East titled: "Within the fire range of Iran."
— Collin Rugg (@CollinRugg) June 22, 2025
"Mr. Trump, you started it, and we will end it." pic.twitter.com/8eculMnwAG
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா பல இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது, அவற்றில், மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்பெரியது என அடையாளப்படுத்தப்படும் கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளம்,
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை ஐந்தாவது படை, ஈராக்கில் அல் அசாத் விமானத் தளம் மற்றும் ஹரிர் விமானத் தளம், தெற்கு சிரியாவில் உள்ள அல் தன்ஃப் காரிசன் இராணுவத் தளம், குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் விமானத் தளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் தஃப்ரா விமானத் தளம் ஆகியவை.
உங்களைக் கையாள்வோம்
இதில் பஹ்ரைனில் மட்டும் 9,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். கத்தாரில் 10,000 வீரர்கள் முகாமிட்டுள்ளனர். குவைத், அரபு அமீரகம் உட்பட மொத்தம் 40,000 வீரர்கள் மத்திய கிழக்கில் 19 முகாம்களில் தங்கியுள்ளனர்.
இன்னொரு ஈரானிய ஊடகவியலாளர் தெரிவிக்கையில், போர் தற்போதுதான் தொடங்கியுள்ளது, ட்ரம்ப் அவர்களே, தற்போது நீங்கள் அமைதியைப் பற்றிப் பேசுகிறீர்களா? பொறுப்பற்ற தன்மையின் விளைவுகளை நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் நாங்கள் உங்களைக் கையாள்வோம் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஏற்கனவே, ஈரான் மற்றும் அதன் வரலாறு தெரியாதவர்கள் கொக்கரிப்பார்கள் என அந்த நாட்டின் உயர் தலைவர் அயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |