தூக்க மாத்திரை கொடுத்து 2 மகள்களை சுட்டுக் கொன்ற தாய்: விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனை
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் கடந்த 2018 ஆண்டு தன்னுடைய இரண்டு மகள்களுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து சுட்டுக் கொன்ற தாய்க்கு 78 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 மகள்களை சுட்டுக் கொன்ற தாய்
2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் திகதி அமெரிக்காவின் வெர்ஜீனியா-வை சேர்ந்த வெரோனிகா யங்ப்ளட் (37) என்ற தாய் அவரது இரண்டு மகள்களுக்கு தூக்க மாத்திரைகளை(sleeping gummies) கொடுத்து பின் படுக்கையிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பிரிந்த கணவர் ரொனால்ட் யங்ப்ளட் உடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வெரோனிகா (Veronica Youngblood)அவரது 15 வயது மகள் ஷரோன் காஸ்ட்ரோ மற்றும் 5 வயது மகள் புரூக்ளின் யங்ப்ளட் ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
Fairfax County Circuit Court
5 வயது மகள் புரூக்ளின் யங்ப்ளட் பிரிந்த கணவர் ரொனால்ட் யங்ப்ளட் உடன் மிசூரி-க்கு (Missouri) இடம் மாற இருந்த நிலையில், இரண்டு மகள்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள வெரோனிகா நினைத்துள்ளார் என காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இதற்காக வெரோனிகா ஜூலை 27ம் திகதி துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
78 ஆண்டுகள் சிறைத் தண்டனை
இரண்டு மகள்களுக்கும் தூக்க மாத்திரைகள் கொடுத்து, பின் படுக்கையிலேயே சுட்டுக் கொன்ற ஆகஸ்ட் 5ம் திகதிக்கு பிறகு, தாய் வெரோனிகா ஆகஸ்ட் 6ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
Fairfax County Circuit Court
அத்துடன் அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றி இருந்தனர்.
இந்நிலையில் தாய் வெரோனிகா விடுதலை செய்யப்படுவது குறித்து பரிசீலிக்கும் முன் 78 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.