தீய அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும்: ஈரான் தலைவர் அறிவிப்பு
சிரியாவில் துணைத் தூதர தாக்குதல் உட்பட இஸ்ரேலின் கொடூர செயல்களுக்கு இந்த தாக்குதல் வெறும் ஒரு எச்சரிக்கை மட்டுமே என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குள் இருக்கும் இலக்கு
இஸ்ரேல் இந்த விவகாரத்தில் பதில் தாக்குதலுக்கு தயாராகாத வரையில், ஈரான் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு முடிவெடுக்காது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் மட்டுமின்றி, இஸ்ரேலுக்குள் இருக்கும் இலக்குகளை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் வீசியது.
ஏப்ரல் 1ம் திகதி டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ஈரான் துணைத் தூதரகம் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக ஈரானின் புரட்சிகர காவலர் அமைப்பு தெரிவித்திருந்தது.
இது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கொடூர நடவடிக்கைகளுக்கான பதிலடி மட்டுமே என்றும் IRGC அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. தாக்குதல் நடவடிக்கையானது உயர்மட்ட அமைப்புகளின் ஒப்புதல் பெற்ற பின்னரே முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, தீய அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமது சமூக ஊடக பக்கத்தில் ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா எச்சரிக்கை
டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ஈரானிய துணைத் தூதரகம் மீது தாக்குதல் முன்னெடுத்தது இஸ்ரேல் என்றே பரவலாக பேசப்படுகிறது. இதனையடுத்து ஒரு தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா முதல் முறையாக எச்சரிக்கை விடுத்தது.
மட்டுமின்றி, அவ்வாறான நடவடிக்கை மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, துணைத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு தங்களால் பதிலடி தர முடியும் என்பதை ஈரான் நிரூபித்துள்ளது.
ஆனால் ஈரானின் ட்ரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாகவும், உறுதியான எண்ணிக்கை வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |