ஜப்பானின் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டார்...அதன் 5 முக்கிய நிகழ்வுகள்

Shinzo Abe Japan Crime
By Thiru Jul 08, 2022 11:40 AM GMT
Report

ஜப்பானின் சிறந்த அரசியல் தலைவர் மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மர்ம நபரால் ஒருவரால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜப்பானின் நாரா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஷின்சோ அபே உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணியளவில் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த நிகழ்வு குறித்து முக்கிய ஐந்து விவரங்கள் இந்த செய்தி தொகுப்பில் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரமும், துப்பாக்கி சூடும்:

ஜப்பானின் மேற்கு நாரா பகுதியில் உள்ள யமடோ-சைடைஜி ரயில் நிலையத்தின் முன் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளரான கெய் சாடோவிற்காக ஷின்சோ அபே பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது உள்ளூர் நேரப்படி சரியாக 11:30 மணியளவில் மர்ம நபர் ஒருவரால் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மேடையிலேயே சுருண்டு விழுந்த ஷின்சோ அபேவிற்கு இரத்தப்போக்கு அதிகமாக காணப்பட்டதை தொடர்ந்து உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

துப்பாக்கி சூடு நடத்தியவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ஷின்சோ அபேவின் இறப்பு:

ஷின்சோ அபே சிகிச்சைக்காக நாரா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மதியம் 12:20 மணிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவருக்கு இருதய இயக்கம் மீட்பு சிகிச்சை, மற்றும் சுவாச மீட்பு சிகிச்சைகள் போன்றவை உடனடியாக வழங்கப்பட்டது.

இருப்பினும் ஷின்சோ அபே மாலை 5:03 மணிக்கு இறந்துவிட்டதாக மருத்துவமனையின் பேராசிரியர் ஹிடெடாடா ஃபுகுஷிமா தெரிவித்தார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டார்...அதன் 5 முக்கிய நிகழ்வுகள் | Ex Japanese Pm Shinzo Abe Assassination 5 Points

அபேயின் கழுத்தின் வலது பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டு இருப்பதாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்?

ஷின்சோ அபேயின் மீது துப்பாக்கி சுடு நடத்தப்பட்ட பின்னர், டெட்சுயா யமகாமி(41) என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தன.

டெட்சுயா யமகாமி ஜப்பானின் கடல்சார் சுய-பாதுகாப்புப் படையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து 2005 ஆம் ஆண்டு சேவையில் இருந்து விலகியுள்ளார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டார்...அதன் 5 முக்கிய நிகழ்வுகள் | Ex Japanese Pm Shinzo Abe Assassination 5 Points

பொலிஸார் டெட்சுயா யமகாமி கைது செய்யப்பட்ட பின்னர், முன்னாள் பிரதமர் மீது விரக்தியடைந்ததாகவும், அவரைக் கொல்லும் நோக்கத்துடன் அபேவை குறிவைத்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்து இருப்பதாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைவர்கள் கண்டனம்:

இந்த தாக்குதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச சீற்றத்தை தூண்டியுள்ளது, இதனை முற்றிலும் மன்னிக்க முடியாதது என ஜப்பானின் தற்போதைய பிரதமர் கிஷிடா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில், உலக தலைவர்கள் விரைவாக தங்களது வருத்தத்தை வழங்கினர் மற்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். நேட்டோ தலைவர் கொடூரமான தாக்குதலைக் கண்டனம் செய்தார் மற்றும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த தாக்குதலை கேட்டு திகைப்படைந்ததாகவும் தற்போது வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டார்...அதன் 5 முக்கிய நிகழ்வுகள் | Ex Japanese Pm Shinzo Abe Assassination 5 Points

ஜப்பானில் அபேவின் பிரபலம் எத்தகையது:

அபே ஜப்பானின் சிறந்த அரசியல்வாதி, அத்துடன் மற்ற தலைவர்களை விட நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர்.

ஜப்பானின் போருக்குப் பிந்தைய காலத்தில், 2006 ஆம் ஆண்டில், 52 வயதில் முதல் முறையாக பதவியேற்றபோது அவர் ஜப்பானின் இளைய பிரதமராக கருதப்பட்டார்.

அபே அபெனோமிக்ஸ் என்று அழைக்கப்படும் அவரது பொருளாதாரக் கொள்கைக்காக பரவலாக அறியப்பட்டார்.

அக்கி அபே எல்ஜிபிடி உரிமைகள் உட்பட சில தாராளவாத காரணங்களுக்கு ஊடக ஆர்வமுள்ள ஆதரவாளராக அறியப்பட்டார், மேலும் இவர் பணக்கார குடும்பத்தை சேர்ந்த அகி அபேவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US