சிகிச்சைக்காக இந்தியா சென்ற கென்யா முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்
கென்யாவின் முன்னாள் பிரதமர் சிகிச்சைக்காக இந்தியாவின் கேரளா மாநிலத்துக்குச் சென்றிருந்த நிலையில், மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 80.
கென்யா முன்னாள் பிரதமர்
கென்யாவின் முன்னாள் பிரதமரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான Raila Odinga, கண் சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார்.
ஆறு நாட்களாக அவர் ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று, புதன்கிழமை காலை வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது திடீரென Odingaவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
Odinga உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Odinga, 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, கென்யாவின் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார்.
Deeply saddened by the passing of my dear friend and former Prime Minister of Kenya, Mr. Raila Odinga. He was a towering statesman and a cherished friend of India. I had the privilege of knowing him closely since my days as Chief Minister of Gujarat and our association continued… pic.twitter.com/Nmya9C3LZi
— Narendra Modi (@narendramodi) October 15, 2025
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed உட்பட உலகத்தலைவர்கள் பலரும் Odingaவின் மறைவுக்கு இரங்கல் செய்திகளைத் தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |