எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் இடம்பெற்றதால் நாடொன்றின் முன்னாள் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு
எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் இடம்பெற்றதால் நோர்வே நாட்டின் முன்னாள் பிரதமர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றதாக அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு
ஏராளமான இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்து, பல பிரபலங்களுக்கு விருந்தாக்கியவர் அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.

இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுவரும் எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள் மூலம், எஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த பிரபலங்கள் பலருடைய உண்மை முகங்கள் வெளி உலகுக்கு தெரியவந்தவண்ணம் உள்ளன.
அவ்வகையில், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில், நோர்வேயின் முன்னாள் பிரதமரான Thorbjørn Jagland என்பவருடைய பெயர் இருப்பது தெரியவந்துள்ளது.
அவர், 2011 முதல் 2018 வரை எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்துள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, Thorbjørn மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம், அதாவது, செவ்வாய்க்கிழமை, Thorbjørn அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றதையடுத்தே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், அதை மறுத்துள்ள அவரது சட்டத்தரணிகள், குற்றவியல் விசாரணை மற்றும் ஊடகங்கள் கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக அவருக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |