பள்ளியில் பயங்கரம்! துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி: பரபரப்பு வீடியோ
ரஷ்யாவில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு தாக்குதலை தொடர்ந்து பயங்கர வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள காசன் நகரில் உள்ள பள்ளி ஒன்றிலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என Tatarstan's சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து சுமார் 20 ஆம்புலன்ஸ் குழுக்கள் பள்ளிக்கு விரைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளி தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேக நபரை சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வயது 17 இருக்கும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாக்குதலில், 8 பள்ளி மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 9 பேர் பலியானதாகவும், இரண்டு இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Selon des données préliminaires, un enseignant et 6 enfants ont été tués dans la fusillade dans une école de Kazan, selon une source TASS. La chaîne TG Baza rapporte 9 morts et 10 blessés. La vidéo a capturé le moment où les enfants ont sauté par les fenêtres pendant la tuerie. pic.twitter.com/fybn8O6fT4
— ⓃⒺⓌⓈ—ⒾⓃⓉ·۰•●🌐 (@NewsInt_) May 11, 2021
மேலும், துப்பாக்கிச் சூட்டின் போது மாணவர்கள் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதிக்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.