அதிகாலையில் குண்டுமழை பொழிந்த போர் விமானங்கள்.! இஸ்ரேல்-காசா இடையே மீண்டும் மோதல்.. அதிகரிக்கும் பதட்டம்
பாலஸ்தீன பிரதேசத்தின் சுயாட்சி பகுதியான காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடார்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் தெரிவித்த தகவலின் படி, வெளிக்கிழமை இரவு காசாவுக்கு அருகே அமைந்துள்ள இஸ்ரேல் எல்லை பகுதியில் ராக்கெட்டுகள் தாக்குதலை தொடர்ந்து சைரன் ஒலி முழங்கியது.
அதேசமயம் காசாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றை இஸ்ரேல் இராணுவம் நடுவானிலே தடுத்து அழித்தது.
இதனையடுத்து, ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் இராணுவத்திற்கு சொந்தமான போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் காசாவின் ஹமாஸ் பகுதியில் தாக்குதல் நடத்தின என இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஹமாஸில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
கடந்த மே மாதம் இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையெ 11 நாட்களாக நடைபெற்று பயங்கர மோதலில் சுமார் 240 பேர் கொல்லப்பட்டனர்.
சர்வதேச தலையீட்டால் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே 11 நாட்களாக நடைபெற்று வந்து மோதல் முடிவுக்கு வந்தது.
תיעוד: אתר של חמאס בשם "ירושלים"(אל-קודס) יעד בתוכו הופצץ | צפו#Gaza #Israel pic.twitter.com/V33uaanIWV
— אדיר לחקים Adir Lehakim (@AdirLM1) September 11, 2021
இந்த சண்டையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு என இரு தரப்புமே தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.