ரஷ்யாவிலிருந்து நூற்றுக்கணக்கான ஜேர்மானியர்கள் வெளியேற்றம்
ரஷ்யாவில், கல்வி மற்றும் கலாச்சாரத்துறையில் பணியாற்றுவோர் உட்பட, நூற்றுக்கணக்கான ஜேர்மானியர்கள் அடுத்த மாதம் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட இருப்பதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மன் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டம்
ரஷ்யா, ஜேர்மனியில் வாழும் ஜேர்மன் பணியாளர்களின் எண்ணிக்கையை, ஜூன் மாத துவக்கம் முதல் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அந்த செய்திகளை ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.
அப்படி வெளியேற்றப்பட உள்ளவர்களில் மாஸ்கோவிலுள்ள ஜேர்மன் பள்ளி ஆசிரியர்களும், Goethe கலாச்சாரக் கூட்டமைப்பு நிறுவன ஊழியர்களும் அடங்குவர்.
GETTY IMAGES
பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை
ரஷ்யாவுக்கும், ஜேர்மனிக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இரு நாடுகளும் தத்தம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியதைத் தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சென்ற மாதம் ரஷ்யாவும் ஜேர்மனியும் முறையே மற்ற நாட்டின் 40 தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், தற்போது ரஷ்யா எடுக்கவிருக்கும் நடவடிக்கையின்கீழ், தூதரக அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான ஜேர்மானியர்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ABC
ஏற்கனவே ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், கல்வி மற்றும் கலாச்சாரத்துறையில் பணியாற்றுவோர் மற்றும் தூதரக அதிகாரிகள் என நூற்றுக்கணக்கான ஜேர்மானியர்கள் அடுத்த மாதம் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ளதால், இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.