$10 மில்லியன் பணம் இருக்கு! இலவசமாக தரேன் என்ற நபர்... ஆசைப்பட்டவர்களுக்கு கிடைத்தது என்ன?
கம்போடியாவை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை பெரிய கோடீஸ்வரர் என கூறி பலரை ஏமாற்றிய சம்பவத்தின் தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
ஸ்டங் டிரெங் மாகாணத்தை சேர்ந்த Hwe Knm என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் ஒரு கோடீஸ்வரர் என அறிமுகப்படுத்தி கொண்டு நேரலை வீடியோவை பதிவிட்டார்.
பின்னர் தன்னிடம் அதிகளவில் தங்க நகைகள் மற்றும் $10 மில்லியன் பணம் இருப்பதாகவும் தனது பதிவை லைக் மற்றும் ஷேர் செய்பவர்களுக்கு அதை இலவசமாக கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் பலரின் செல்போன் நம்பர்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை வாங்கி கொண்டார். ஆனால் யாருக்குமே எந்தவொரு பணமும் வராத நிலையில் அதிர்ச்சியும் மோசடி செய்யப்பட்டோம் என்பதை உணர்ந்த பலரும் பொலிசில் இது குறித்து புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் பொலிசார் Hwe-வை கைது செய்து விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. அதன்படி அவரிடம் இருந்த 2 மில்லியன் டொலர் மதிப்பிலான போலி பணத்தை கைப்பற்றிய பொலிசார் போலி நகைகளையும் கைப்பற்றினர்.
விசாரணையின் போது Hwe கூறுகையில், பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்கவே இப்படி செய்தேன், இதன் மூலம் பல பேரை கவர வேண்டும் என்பதே என் திட்டமாக இருந்தது.
இது சட்டவிரோதமான செயல் என நான் அறியவில்லை என கூறியுள்ளார்.