கொல்லைப்புறத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம், நகைகள்! பொலிசாரை அதிரவைத்த குடும்பம்
தென்னாப்பிரிக்காவில் வீட்டின் கொல்லைப்புறத்தில் மண்ணை தோண்டிய போது உள்ளே கட்டுக்கட்டாக பணம், நகைகள் மற்றும் போதை பொருட்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தம்பதி மற்றும் அவர்களின் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி Chad Rick Modra (38) மற்றும் அவரின் பெற்றோரான Andrew Modra (62), Carolyn Patricia Modra (59) ஆகியோர் வீட்டுக்கு வந்த பொலிசார் கொல்லைப்புறத்தில் சில இடங்களில் தோண்டினர்.
அப்போது அங்கு 600 கிராம் போதை பொருட்கள் ஒரு இடத்திலும், மற்றொரு இடத்தில் ஒரு பெட்டியில் கட்டுக்கட்டாக $50,870 அளவில் பணமும் இருந்தது. இதோடு நகைகளும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த பொலிசார் அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் வைத்திருந்தல் மற்றும் பணமோசடி வழக்கு பதிவு செய்தனர்.
மூவர் மீதும் ஏற்கனவே போதை பொருள் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் தற்போது Carolynக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதே சமயம் வரும் வாரங்களில் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.