இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு பொலிசார் சிரித்த வழக்கு: 262 கோடி வழங்கிய நகர நிர்வாகம்
அமெரிக்காவில், 2023ஆம் ஆண்டு, சாலையைக் கடக்கும்போது பொலிஸ் கார் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்ட இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
அந்த இளம்பெண் மீது மோதிய காரில் இருந்த பொலிசார், அந்த இளம்பெண் குறித்து மோசமாக விமர்சித்து சிரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கிய சம்பவம் நினைவிருக்கலாம்.
அந்த வழக்கில், அந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு 262 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜானவி (Jaahnavi Kandula, 23).

அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த ஜானவி, Seattle நகரில் சாலை ஒன்றைக் கடந்துகொண்டிருக்கும்போது, வேகமாக வந்த பொலிஸ் கார் ஒன்று அவர் மீது மோதியது.
மணிக்கு 119 கிலோமீற்றர் வேகத்தில் வந்த அந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜானவி பரிதாபமாக பலியானார்.
சிரித்த பொலிசார்
இந்நிலையில், அந்தக் காரிலிருந்த பொலிசார், அந்த இளம்பெண்ணைக் கொன்றுவிட்டு, அதைக் குறித்து சற்றும் வருத்தப்படாமல், அவரை கேலி செய்து சிரிக்கும் காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.
"She had limited value..", Seattle Police office, Daniel Auderer caught on a body camera last year laughing about the death of an Indian Student, Jaahnavi Kandula, terminated.
— Sidhant Sibal (@sidhant) July 18, 2024
Vdo ctsy: Seattle Police pic.twitter.com/ptvp9dFsST
கெவின் (Kevin Dave) என்னும் பொலிசார் அந்தக் காரை ஓட்டிய நிலையில், அவருடன் அதே காரில் பயணித்த பொலிஸ் யூனியனைச் சேர்ந்தவரான டேனியல் (Daniel Auderer) என்பவர், அவள் ஒன்றும் 40 அடி தூரமெல்லாம் தூக்கி வீசப்பட்டது போலத் தெரியவில்லை, ஆனாலும், அவள் செத்துவிட்டாள் என்று சொல்லிவிட்டு சிரித்துள்ளார்.
அப்போது தனது சட்டையிலிருந்த கமெராவை அவர் அணைக்க மறந்துவிட்டிருக்கிறார், அவர் பேசி சிரிக்கும் காட்சிகள் கமெராவில் பதிவாகியிருந்தன.
262 கோடி வழங்கிய நகர நிர்வாகம்
அந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருந்தது. இந்திய தூதரக அதிகாரிகள் அந்த விடயம் தொடர்பில் விசாரணை கோரியிருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து அந்த பொலிசார் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில், Seattle நகர நிர்வாகம், ஜானவி குடும்பத்துக்கு 29 மில்லியன் டொலர்கள் செட்டில்மெண்ட் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

நகர அட்டர்னியான எரிக்கா இவான்ஸ் என்பவர் இந்த விடயம் குறித்து பேசும்போது, ஜானவியின் மரணம் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது.
இந்த செட்டில்மெண்ட் ஜானவியின் குடும்பத்துக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுக்கும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

அத்துடன், ஜானவியின் உயிர் மதிப்பு மிக்கது, அவரது உயிர் அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், எங்கள் சமுதாயத்துக்கும் மதிப்பு மிக்கது என்றும் கூறியுள்ளார் அவர்.
ஜானவி கொல்லப்பட்டபோது, அவளை கார் மோதிக் கொன்ற பொலிசாரில் ஒருவர், அவள் அந்த அளவுக்கு மதிப்பு உள்ளவள் இல்லை, ஒரு காசோலைஎழுதிக் கொடுத்தால் போதும் என்றும் கூறி சிரித்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |