எங்களுக்கு நீதி வேண்டும்... கர்ப்பிணியான புதுமணப் பெண் விவகாரத்தில் குடும்பத்தினர் கோரிக்கை
ஸ்கொட்லாந்தில் மலை முகட்டில் இருந்து விழுந்து மரணமடைந்த் கர்ப்பிணியான புதுமணப் பெண் தொடர்பில் அவரது குடும்பத்தினர் முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர்.
எடின்பரோவில் உள்ள Arthur's Seatல் இருந்து வியாழக்கிழமை தவறி விழுந்ததில் 31 வயதான ஃபவ்ஸியா ஜாவேத் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினருக்கு, துரதிர்ஷ்டவசமாக அவரது உயிரை காக்க முடியாமல் போயுள்ளது.
மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த ஃபவ்சியா, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், தேனிலவிற்காக ஸ்காட்டிஷ் நகரத்திற்கு பயணம் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
ஃபவ்சியா மரணம் தொடர்பில் தற்போது 27 வயது நபரை ஸ்கொட்லாந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஃபவ்சியா மரணம் தங்களின் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளதாக கூறும் உறவினர்கள்,
இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி வேண்டும் என முறையிட்டுள்ளனர்.