இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தமிழன் அஸ்வினை ஏன் இந்திய அணியில் சேர்க்கல? கடும் கோபத்தில் ரசிகர்கள்
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை.
சுழற்பந்துவீச்சாளராக ரவீந்திர ஜடேஜா மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்கள் ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் என 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு டுவிட்டரில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குப் பிறகு, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் இணையும் முன் அஸ்வின் கவுன்டி கிரிக்கெட்டில் ஒரு ஆட்டம் விளையாடினார். இதில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து, அவுதிரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் விளையாடும்போது ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சூழலில் பேட்டிங்கையும் கருத்தில்கொண்டு அஸ்வினுக்குப் பதில் ஜடேஜாவையே இந்திய அணி இதற்கு முன்பு தேர்வு செய்திருக்கிறது.
இதனையும் குறிப்பிட்டு ஒவ்வொரு முறையும் அஸ்வினே பலிகடா ஆக வேண்டுமா என்ற ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
Ashwin dropped from the team on account of not uploading enough pictures from the streets of England & instead whiling his time away by playing county cricket, preparing for the series. #ENGvIND
— Shridhar V (@iimcomic) August 4, 2021
No Ashwin?! #ENGvIND pic.twitter.com/JC3buwzdH6
— Wasim Jaffer (@WasimJaffer14) August 4, 2021