அவரை மட்டும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்காதீங்க! ரொம்ப சொதப்புறாரு... ரசிகர்கள் கோரிக்கை
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கும் நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர் தொடர்பில் ரசிகர்கள் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்.
இந்திய அணியின் புதிய கேப்டனாக பதவி ஏற்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது இன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதலாவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது.
ஜாம்பவான் டிராவிட் பயிற்சியின் கீழ் களமிறங்கும் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பளிக்காமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு காரணம் யாதெனில் என்னதான் அனுபவ வீரராக புவனேஷ்வர் குமார் திகழ்ந்தாலும் அடிக்கடி காயத்தால் சிக்கி தனது வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவற்றை இழந்துள்ளார்.
அதுமட்டுமின்றி பழைய மாதிரி விரைவில் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தடுமாறுவது மட்டுமின்றி அதிக ரன்களும் கொடுக்கிறார்.
உலகக்கோப்பையில் அவரது செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என ரசிகர்கள் குறை கூறியுள்ளனர்.