கொலம்பியாவில் அதிகரிக்கும் வன்முறை: ஹெலிகாப்டரை ட்ரோன் மூலம் சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்!
கொலம்பியாவில் நடந்த ஒருங்கிணைந்த வன்முறை தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
கொலம்பியாவில் வன்முறை
கொலம்பியாவில் முன்னாள் கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படையின் கிளர்ச்சியாளர்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள காலி நகரில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று ராணுவ விமான பள்ளிக்கு அருகே வெடித்ததில் 5 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இதையே போல கொலம்பியாவின் வடக்கு பகுதியில் கோகோ இலைகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டரை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்கி அழித்ததில் 12 பேர் வரை கொல்லப்பட்டனர்.
கிட்டத்தட்ட 17 பேர் கொல்லப்பட்டும், 30க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல், சமீபத்தில் கடத்தப்பட்ட கோகோயின் பறிமுதலுக்கு பிறகு நடந்து இருப்பதாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |