கொன்று குவிக்கப்பட்ட 1,400 உயிர்கள்! இரத்தக்கறையான கடற்கரை.. வைரலாகும் கொடூர சம்பவத்தின் புகைப்படங்கள்
டென்மார்க் நாட்டில் 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில், டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது பாரோ தீவுகள் (Faroe Islands). இந்த தீவுகளில் வேட்டையாடுவதற்கு எந்த தடையும் இல்லை.
இந்த தீவுகளில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினர், கடல்வாழ் விலங்கினங்களை குறிப்பாக திமிங்கிலம் மற்றும் டால்பின்களை வேட்டையாடுகின்றனர்.
'கிரைண்டாட்ராப்' (Grindadrap) அழைக்கப்படும் இந்த வேட்டையில் திமிங்கலங்களும் டால்பின்களும் கொடூரமாக கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடல்நீர் செந்நிறமாக காட்சியளிக்கும்.
இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த கொடூரமான வேட்டை தொடர்கிறது.
#Denmark The Faroe Islands, Denmark's overseas autonomous territory, held a hunting activity on the 12th. More than 1400 white edge dolphins were killed, and the whole Gulf flowed with blood, triggering the anger and condemnation of animal conservationists. pic.twitter.com/fVJDbsZTA1
— bahtbag (@thaibahtbag) September 14, 2021
இந்த நிலையில், பாரோ தீவின் வேட்டைக்காரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான வேட்டையை நடத்தியுள்ளனர். இந்த வேட்டையின்போது ஒரே நாளில் 1,428 டால்பின்கள் (white-sided dolphins) கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி தண்ணீர் முழுவதும் ரத்தம் கலந்து செந்நிறமாக காட்சியளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.
Last night, 1428 white sided dolphins were slaughtered in the Faroe Islands in the name of tradition. An entire superpod completely wiped out. #dolphins #saveourseas #dontkilldolphins #stoptheslaughter pic.twitter.com/0qnZtqOh5R
— Bryan Adams (@bryanadams) September 14, 2021
இந்த அளவிற்கு ஏராளமான டால்பின்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை சர்வதேச பாதுகாப்பு குழுக்கள் கண்டித்துள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். இது மிகவும் கொடுமையானது என்றும் இந்த வேட்டை தேவையற்றது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.